தீபாவளிக்கு சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ..

 தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.

நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.