திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் : மு.க.ஸ்டாலின்..

திமுகவின் தலைவர் என்றாலும் நான்தான், தலைமை தொண்டன் என்றாலும் நான்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாம் என்ற உயர்வுடன் இணைந்து பயணித்து, இன்ப்பகையை முறியடித்து தேர்தல் களத்தில் வெற்றுகளை பெறுவோம் என்றும் கூறினார்.

கொள்கை ரீதியாக இணைந்துள்ள தோழமை கட்சிகளிடம் குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் அது ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம், ஏன் இரண்டும் இணைந்து கூட வரலாம் என்றும், எந்த தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான திமுகவின் இலக்கு என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞருக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

நந்தமூரி ஹரிகிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.