திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.

கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பிராக இருந்து வருகிறார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். மக்கள் பணியிலும் கட்சி பணியிலும் சிறந்து விளங்கினார்.
1958-ல் பிறந்த அன்பழகனின் 62-வது பிறந்தநாள் இன்று பிறந்தநாளில் அவர் மறைந்துள்ளார்.