திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்..

நீதிபதிகள், பட்டியலினமக்களை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆர்.எஸ் பாரதி திடீரென மே-24 ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது இது தொடர்பான ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்ததால் இன்று எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்த அவரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் தீர்ப்பை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பிற்பகல் 4 மணி அளவில் வழங்கிய தீர்ப்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.