திராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது..


திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் திராவிட மொழிக்குடும்பம் சுமார் 4,500 வருடங்கள் பழமையானது என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த, மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட் மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகம் மற்றும் இந்தியாவின் டேராடூன் நகரில் அமைந்துள்ள வைல்ட்லைஃப் ஆய்வு நிலையம் இணைந்து, உலகின் பழமையான மொழிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது.

திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ள ஏராளமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியவந்துள்ளது. Royal Society Open Science என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மேற்கு ஆஃப்கானிஸ்தானிலிருந்து, கிழக்கு பங்களாதேஷ் வரை ஏறக்குறைய 600 மொழிகள் தோன்றியிருப்பதும், அதில் திராவிடம், இந்தோ- யுரோப்பியன், சீனோ- திபெத்தியன் என ஆறு பெரிய மொழிக்குடும்பங்களும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.