டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா மகளான பிரியங்கா அவரது டுவிட்டரில்; அதிபர் டிரம்பின் வருகைக்காக 100 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக அறிகிறேன்.

இந்த பணம் ஒரு குழு மூலம் செலவிடப்படுகிறது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது. அக்குழுவுக்கு எந்த அமைச்சகம் எவ்வளவு பணம் கொடுத்தது ? இது போன்ற விவரத்தை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அரசாங்கம் ஏன் மறைக்கிறது? என தெரிவித்துள்ளார்.