எது நீதி? : செம்பரிதி

rajiv convicts 1

ஏழு பேரை விடுவிக்கும் முடிவை எடுத்ததன் மூலம், அதிமுகவும், அதனை ஆதரித்ததன் மூலம் திமுகவும் இந்தியாவின் இறையாண்மையைச் சூரையாடி விட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் அலருகின்றனர்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குருவிகளைப் போல், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் படும் போதெல்லாம், இந்த இறையாண்மை ஆவேசம் இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அது வேறு எங்கோ ஒரு நாட்டில் நடப்பது போல மவுனத்துடன் வேடிக்கை பார்ப்பார்கள்.

கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில், இத்தாலியக் கப்பல் பணியாளர்களை விடுவிக்க, இந்திய நீதிநிர்வாக அமைப்பையே இ்த்தாலி மிரட்டி உருட்டும் போதெல்லாம், இவர்களது இறையாண்மைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படுவதில்லை.

போபாலில் விஷவாயுவைக் கசியவிட்டதன் மூலம் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆண்டர்சன் என்ற கொடூரக் கொலயாளி, ஆளும் காங்கிரஸ் கட்சியின் தயவுடனேயே இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றிருப்பது தெரியவந்த போதெல்லாம், நாட்டின் இறையாண்மைக்கு எந்தச் சிறுமையும் ஏற்பட்டுவிட்டதாக இவர்கள் கருதவில்லை.

கூடங்குளlத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ரஷ்யாவின் அணுஉலையைக் காப்பதற்காக, வாழ்வாதாரத்தைக் காக்கப் போராடும் சொந்தமக்களின் மீதே அரசு இயந்திரத்தை ஏவித் தாக்குதல் நடத்தியபோதெல்லாம், இந்திய இறையாண்மைக்கு எத்தகைய பங்கமும் ஏற்பட்டு விட்டதாக இவர்கள் பதறவில்லை.

சொந்த நாட்டில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்ததுடன், சீனா போன்ற நாடுகளிலும் தோல்வியடைந்து, அங்கெல்லாம் திறக்கப்பட்ட வணிக வளாகங்களை மூடிவரும், அமெரிக்காவின் வால்மார்ட் என்ற வர்த்தகக் கொள்ளையர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதில் எல்லாம் இவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. அப்போதெல்லாம் இவர்கள் சொல்லும் இறையாண்மையை உயிரோடு குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவார்கள்.perarivalan

இப்படி, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இறையாண்மை என்னும் நாட்டின் தற்சார்புச் சுயமரியாதைக்கு இழுக்கும், சிறுமையும் நேர்ந்த எத்தனையோ தருணங்களைப் பட்டியலிட முடியும்.

அப்போதெல்லாம் வராத ஆத்திரம், காங்கிரஸ்காரர்களுக்கு இப்போது வந்திருக்கிறது.

23 ஆண்டுகள் மரணத்தைவிடவும் உயிர்வலியைத் தரக்கூடிய தண்டனையை அனுபவித்துவரும் அந்த மூவரையும் விடுவிப்பதில்தான், இறையாண்மையின் இறுதி மூச்சே அடங்கியிருப்பது போல இப்போது துடிக்கிறார்கள்.

மரணதண்டனைகளின் மூலம் மட்டுமே காப்பாற்றப் படுவதற்கு, இறையாண்மை என்பது என்ன பலிபீடமா?

அது மட்டுமல்ல.

ராஜிவ் படுகொலையின் போது பலியான 14 பேரின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் வேறு இருக்கிறார்கள்.

நிச்சயமாக அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அதை வழங்க வேண்டியதே காங்கிரசும், அதன் தலைமையிலான அரசும், அதன் பிடியில்rajiv இருக்கும் சிபிஐயும்தானே…

ராஜிவ் கொலைவழக்கில் முறையாக விசாரணை நடந்திருந்தால், அவர்களுக்கும் நீதி கிடைத்திருக்கும் தானே…

அதுநடைபெறவில்லை என்பதுதானே தமிழக வெகுமக்களின் முக்கியமான கேள்வி. உதாரணத்துக்கு அந்தக் குரல்களில் ஒன்றாக துபையில் இருக்கும் கீதப்பிரியன் கார்த்திகேயன் என்ற தோழர் தமது முகநூலில் எழுப்பியிருக்கும் கேள்விகளைப் பார்க்கலாம்…

இவர்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!! மூடர்கள் ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் இந்த 3 பேரை அவசியம் தூக்கில் போட வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கை,சரியாகவே விசாரிக்கவில்லை என்பது தானே நடந்த உண்மை,ராஜீவ் கொலை குறித்து பேரறிவாளனுக்கு மட்டும் தான் முன்கூட்டியே தெரியுமா? ஏன் அப்போதைய ஜனதா தள சென்ட்ரல் மினிஸ்டர் சுப்பிரமணியசாமிக்கு தெரியாதா? ஆர்டிஎக்ஸ் பெல்ட்பாம் பூஜை செய்து ஆசியளித்த அரசியல் ப்ரோக்கர் கம் போலிச் சாமியார் சந்திராசாமிக்கு தெரியாதா?

ஒரு முக்கிய அரசியல்வாதி டில்லியில் இருந்து வந்தால் எப்படி ஜால்ரா அடிப்பார்கள்? லோக்கல் அல்லக்கைகள்,ஆனால் அன்று அங்கே ஸ்ரீபெரும்புதூரில் 1991மே21 நடந்தது என்ன?ஒரு முன்னாள் பிரதமர்,அதுவும் புனிதப்பசு குடும்பத்தின் ஒரே வாரிசு,அவர் மனது வைத்தால் கிடைக்கும் ராஜயோகம்,இரவு 10-00 மணி வேறு , கொடிய கத்திரி வெயில் புழுக்கம் வேறு,திசைக்கொன்றாக விசிறிக்கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லக்கைகள்?

போலீசாரின் பாதுகாப்பை விட அல்லக்கைகள் பாதுகாப்பு ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியம்?,தலைவரின்  கடைக்கண் பார்வைக்கு எப்படி ஏங்குவார்கள் அல்லக்கைகள். யாராவது அந்தண்டை இந்தண்டை அவரை விட்டு விலகுவார்களா? பிரியாணி இலைக்கு அடித்துக்கொள்ளும் நாய் போல அல்லவாநான் நீ என போட்டி போட்டு அவரை சுற்றி ஈயாக மொய்த்து எடுப்பார்கள்?

ஆனால் நடந்த உண்மை நிலவரம் என்ன? அங்கே பெங்களூர் நெடுஞ்சாலையில்,இரவு 10மணி வாக்கில் புதிதாய் இந்திரா சிலையை திறக்கும் வரை உடன் இருந்துவிட்டு ராஜிவ் மேடையை நோக்கி நடக்கையில் கமுக்கமாக, லாவகமாக, கழண்ட விஐபிக்கள் மூப்பனார்,ஜெயந்தி நடராஜன்,வாழப்பாடியார்,இத்யாதி, அவர்கள் யாருக்குமே தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று? அன்று கூட்டத்துக்கு வராமல் போன கூட்டணித் தலைவி அம்மா, அவருக்கு தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று?

அப்படி அவர்களுக்கு அந்த உண்மை தெரியாமல் போயிருந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய தலைவரான தா.பாண்டியன் போல அவர்களும் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்திருப்பார்கள் அல்லவா?. பொதுவுடமைக் கட்சியின் கூட்டணித்தலைவர் ராஜீவ் பேசுவதை மொழிபெயர்க்க உடன் வந்து பலத்த காயமடைகிறார்,ஆனால் ராஜீவின் கட்சியைச் சேந்த முத்த தலைவர்களுக்கு எந்த கிறலுமே இல்லை.நகைப்புக்கிடமாக இல்லை?

ஹரிபாபு எடுத்த புகைப்படத்தில் தற்கொலைப் போராளி தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது,ஆனால் இறந்து போன  தணுவின் நெற்றியில் இருக்கும் பொட்டு எப்படி வந்தது? அந்த துக்க கரமான நேரத்திலும்,மரண ஓலத்துக்கிடையே ,நேரம் ஒதுக்கி பொட்டு வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட் யார்?[குற்றத்தை இழைத்தவர்களை  தமிழ் இந்து கொலையாளியாக சித்தரிக்க நடந்த வேலை என்று தெரியவில்லையா?]

கொலைக்கான சூத்திரதாரி ஒற்றைக்கண் சிவராசன்  விடுதலைப்புலிகள் குழுவை சேர்ந்தவன் என்று சுப்ரமணியஸ்வாமி பரப்பிய அவதூறின் ரீதியிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டன, சிவராசனின் சாயல் தமிழனுக்கு உரிய சாயலே அல்ல.சிங்களனுக்கு உரிய தோற்றம் கொண்டவன் சிவராசன்.அவன் படத்தை உற்றுப் பார்த்தால் ராஜபக்சேவின் சிங்கள் தோற்றம் நன்கு புலப்படும்,சிவராசன் விடுதலைப் புலிகள் குழுவை சேர்ந்தவன் என்பதற்காக சிபிஐ முன்வைக்கும் வலுவான ஆதாரம் தான் என்ன?சிவராசனுக்கும் சந்திராசாமிக்கும் சுப்பிரமணியஸ்வாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்ன?இதை குறித்து வாக்குமூலம் கொடுத்த 26ஆம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெங்களூர் ஜெயராம் ரங்கநாத்தின் முக்கிய சாட்சியத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மர்மம் தான் என்ன?

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்,குண்டு வெடிக்கப்போவது தெரியாமல் அன்று ஒற்றைக்சிவராசனால்  தினக்கூலி பேசி பஸ்ஸில் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட லோக்கல் போட்டோக்ராப்பர் ஹரிபாபு போடோக்களாக எடுத்துத் தள்ளியியபடியிருந்தார், கடைசி ஐந்து நிமிடம் முன் சிவராசன், நளினி எல்லோருமே அகன்றும் ஹரிபாபுவுக்கு இது தெரிவிக்கப்படவில்லை, அதனால் அவர் மிகவும் பரிதாபமாக பலியானார், அதே போன்றே பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலைக்கான சதி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?!!! இல்லையா?!!!

ஏன் திருச்சி வேலுச்சாமியின் மனுவின் ரீதியில் சிபிஐ வழக்கை விசாரிக்கவில்லை? சந்திராசாமிக்கு ஏன் அப்படி ஒரு விஐபி அந்தஸ்து? வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி+சந்திராசாமியை ஏன் தப்பவிட்டனர்? அவர்களை ராஜீவ் மீது விசுவாசம் கொண்ட காங்கிரசார் கூட எதுவும் செய்யவில்லையே? ஏன் அந்த பயம்?

சரி ,மே 2009 சுப்ரீம் கோர்ட்டு சந்திராசாமியின் மீதான வெளிநாட்டு பயணத்தடையை ஏன் திடீரென விலக்கிக்கொண்டது?அவருக்கு ஜவாப்தாரி கையெழுத்து போட்டது யார்?  2009 மே மாதமே,போபால் கொலைகாரன்,வாரன் ஆண்டர்சன் போல நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திராசாமி  இப்போது எங்கே இருக்கிறார்? அது யாரைக் கேட்டால் தெரியும்? தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தெரியுமா?!!!

ராஜீவுடன் சேர்த்து 14 பேர் பலியானர் என அரசின் கணக்கு சொல்கிறது, ராஜீவாவது இலங்கையிலும் ,கிழக்கு தில்லியிலும் விதைத்ததற்கு அறுவடை செய்தார் எனலாம், ஆனால் அந்த அப்பாவிகள்  13 பேர் செய்த பாவம் என்ன?அவர்களுக்காக வேண்டியேனும் இவ்வழக்கின் உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தண்டனை தரக்கூடாதா?

இன்னும் ஒரு விஷயத்தை தயவு செய்து யோசியுங்கள், விடுதலைப் புலிகள் (LTTE)  இயக்கம் போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் தனி தமிழீழம் வேண்டி துப்பாக்கியுடனும் சயனைட் குப்பியுடனும் போராடி வந்தன,அவற்றை சாம,பேத,தண்டம் ஆகிய மூன்று நெறிமுறைகளையும் பிரயோகித்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் மேதகு [ஒரே] புரட்சித்தலைவர் பிரபாகரன்.இவர் சேகுவாரேவையும் மிஞ்சும் நெஞ்சுரம் கொண்ட வீரர் என்றால் மிகையில்லை.

இந்த 40க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏன் சிங்களர்களுக்கும் கூட ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை மீதும் ராஜிவ் மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது, அதில் எஞ்சிய வீரர்கள் யாரேனும் கூட ராஜீவ் படுகொலை என்னும் அகில உலக சதிக்கு துணை போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? ஒரே கல்லில் ராஜீவையும் வீழ்த்தி ஆறாத பழியையும் பிரபாகரன் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கலாமா? இல்லையா?!!!

 

கீதப்பிரியன் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விகள்தான், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் மனதைக் குடைந்து வரும் முக்கியமான கேள்வி என்பதை மறுக்க முடியாது.

ராஜிவ் கொலை வழக்கில் நீதிகேட்டுப் போராடும் காங்கிரஸ் கனவான்களே…. நீதியை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வெளியில் எங்கோ தேடிக் கொண்டிருப்பதை வேடமென்பதா… அறியாமை என்பதா…

அதுவும் போகட்டும்.

ராஜிவ் படுகொலை அரங்கேறிய தருணத்தில், சுப்பிரமணியன் சுவாமியோடு இருந்தவர் திருச்சி வேலுச்சாமி. அண்மையில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு, காங்கிரசும், அதன் தலைமையிலான அரசும் என்ன பதில்களை வைத்திருக்கின்றன?

இதோ சூரியக்கதிரில் வெளியாகி இருக்கும் திருச்சி வேலுச்சாமியின் பேட்டி… trichy veluchamy

இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரேதெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையேஎன்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.SubramaniamSwamy laghing

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்குவிடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லைஎன்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டுசரி போய் வாருங்கள்என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’
sonia 4
சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டுகொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லைஎன்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோஎனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே– 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 –க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 –ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமிதேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல். குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரிமூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி. அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லைஎன்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லைpriyanka 1

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி. அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி. தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வதுஇந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

 

திருச்சி வேலுச்சாமி குறித்து நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி, சந்திராசாமி குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகளை புறந்தள்ளிவிட முடியாது. இந்தத் தகவல்களில் பல படுகொலை நடந்த நேரத்திலேயே ஊடகங்களில் சந்தேகங்களாக வெளியானவைதான். இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளே, சந்திராசாமியின் படத்தை வெளியிட்டு சந்தேகங்களையும் எழுப்பின.

சிவராசன் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நபர்தான் என்பதற்கான அழுத்தமான ஆதாரமும், சிபிஐக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை.

இத்தனை போதாமைகளும், முரண்பாடுகளும், மழுங்கடிப்புகளும், மறைப்புகளும் நிறைந்த இந்த வழக்கில், பேட்டரி வாங்கிக் கொடுத்தவர்களையும், பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்தவர்களையும் தூக்கில் போட்டே தீர வேண்டும் என்று அடம்பிடிப்பது எந்த வகையான நீதியைச் சேர்ந்தது.

ராஜிவ் காந்தியுடன் பலியான 14 அப்பாவிகளின் குடும்பத்துக்காக இன்று கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் காரர்களுக்கு, அமைதிப்படை என்ற பெயரால், தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து இந்திய ராணுவத்தினர் நடத்திய கொலைவெறித்தாண்டவம் நினைவுக்கு வரவில்லை போலும். அப்போது கதறியபடி உயிரையும், மானத்தையும் விட்ட பெண்களின் ஓலம், தமிழினம் உள்ளவரை ஓயாத பெருந்துயரத்தின் அலறல் ஆயிற்றே…. அது இவர்கள் மனச்சாட்சி்ககு உரைக்கவில்லை போலும்.

சர்வதேச சமூகத்தின் சதியாலும், இந்தியாவின் நயவஞ்சகத்தாலும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே… அதற்கு யாரைத் தூக்கில் போடுவது…

காலம் உருண்டோடி விட்டது. ராஜிவ் படுகொலை என்பது, சர்வதேச சூழ்ச்சியின் பயங்கரம் என்பது, அனைவரின் மனச்சாட்சிக்கும் புரிந்தாயிற்று. அதற்குள் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களும் தண்டனையை அனுபவித்தாகி விட்டது. இப்போது ஏதோ, அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகளின் அடிப்படையில், ஏதோ ஓர் அரசியல் இடைவெளியில், அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான தருணம் வாய்த்திருக்கிறது.

harithra

“என்னுடைய பெற்றோர் அப்பாவிகள் என நம்புகிறேன். 23 வருடங்கள் கஷ்டப்பட்டது அவர்கள் மட்டுமல்ல, எந்தத் தவறும் செய்யாத நானும்தான். எனக்காகவாவது எனது பெற்றோரை மன்னித்து, விடுவிக்கும்படி ராகுல் காந்தியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

என் பெற்றோரின் விடுதலைச் செய்தியைக் கேட்டு, அவர்களோடு இணையப்போவத்தை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மறுநாளே நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தைக் கேட்டு மனம் உடைந்துப் போனேன்”

என்று நளினி முருகன் தம்பதியரின் மகள் ஆரித்ரா விடுத்துள்ள உருக்கமாக விடுத்துள்ள வேண்டுகோளைப் பாருங்கள்.

இத்தனை நைந்துபோன உயிர்களின் விடுதலையைத் தடுப்பதன் மூலம்தான் இந்தியாவின் இறையாண்மை நிலைநாட்டப்படும் என்று, காங்கிஸ்காரர்களும், மரணதண்டனையை ஏதோ மகேஸ்வரனுக்கு நடத்தப்படும் மகாகும்பாபிஷேகம் போல் கொண்டாடும் பாசிஸ்டுகளும் நம்பினால்… நம்மால் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

ஆனால், வரலாறு வழங்கும் தாட்சண்யமற்ற தண்டனையில் இருந்து மட்டும் அவர்கள் தப்பவே முடியாது.

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*