பிரபல உணவகங்களில் 2-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை..

வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் முழுவதும் உள்ள சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ் கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட்ஸ் ஆகிய பிரபல ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வடபழனியில் உள்ள சரவணபவன் உணவகத்தின் தலைமை அலுவலகம், கே.கே.நகரில் உள்ள வணிக அலுவலகம், அசோக்நகரில் உள்ள சரவணபவன் நிறுவனர் ராஜகோபால்,

அவரது மகன்கள் மற்றும் சரவணபவன் தலைமை செயல் அதிகாரி கணபதி ஆகியோரது வீடுகளில் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன