விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியவர்கள், அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளனர்: ப. சிதம்பரம்

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடி ஆட்சியில் 4 கோடி 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என சிவகங்கையில் ப. சிதம்பரம் பேசினார்.

மேலும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியவர்கள், அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.