பிப்., 24 முதல் ‘அம்மா தொலைக் காட்சி’ ….

அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘தொலைக் காட்சி ‘ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், ‘தொலைக் காட்சி’ தொடங்க, ஒருங்கிணைப்பாளர், பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க., தலைமை பேச்சாளரான, நடிகர் ஜெயகோவிந்தன், ‘நமது அம்மா’ என்ற பெயரில், நாளிதழ் ஒன்றை நடத்தி வருகிறார். அதை வாங்கி, கட்சி பத்திரிகையாக நடத்த முடிவு செய்துள்ளனர்.அதே போல், முன்னாள், எம்.பி., ஒருவர் பெற்றுள்ள, ‘தொலைக் காட்சி’ உரிமத்தை வாங்கி, ‘அம்மா தொலைக் காட்சி’ என்ற பெயரில், புதிய, ‘தொலைக் காட்சி’ ஒன்றை துவக்கவும் முடிவு செய்துள்ளனர். இரண்டையும், ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்