காய்ச்சல் வந்தால், அலட்சியம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களை கண்டறியும் வசதி அரசு மருத்துவமனைகளில் இருப்பதாக தெரிவித்தார்.