போலி டிவிட்டர் கணக்கு மூலம் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார்..


ஆர்.கே. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் உதயகுமார் ட்விட்டரில் பதிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உதயகுமார்,’நான் தினகரனை வாழ்த்தவில்லை’ என மறுத்துள்ளார். ட்விட்டரில் தனது பெயரில் வெளியான செய்திக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறினார்.