ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது.

வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோளுடன்- ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம்,

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (நவ.,14) மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் துவங்கியது. விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ செய்துள்ளது