ஜி20 மாநாடு : சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு..

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று மோடி குறிப்பிட்டார்.

ஜி20 மாநாட்டி முன்னிட்டி நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஜி20 நாடுகளின் மாநாடு அர்ஜெண்டினாவின் பியூனோ ஏர்ஸ் நகரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி அர்ஜெண்டினா சென்றுள்ளார்.

இந்த மாநாட்டின் போது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது.

மேலும் பிற நாடுகளில் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் போது சந்திக்க இருக்கிறார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற உலக அமைதிக்கான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், “

யோகா உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலுக்கு பலத்தையும் மனதுக்கு அமைதியையும் யோகா வழங்குகிறது.” என்று குறிப்பிட்டார்.

மேலும், “எப்போது மனிதனின் மனதில் அமைதி நிலவுகிறதோ அப்போதே அவனது குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் உலகத்திலும் அமைதி பிறக்கிறது” எனவும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.