கஜா புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலின்பாதிப்பு

குறித்து மாவட்டம் வாரியாக தமிழக அரசு அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரத்தை சார்ந்தவர் கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடராக அறிவிக்க  வலியுறுத்தி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.