கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜே.பி.நட்டா பேசினார்.

அப்போது, கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா உறுதி அளித்தார்.