கஜா புயல் : காரைக்கால் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

தமிழகம்,புதுவையை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால்,

முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது போல் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி,கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கேசவன்.