கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 80 கி.மீ முதல் 100 கி.மீ வரை வேகமாக காற்று வீசும்,கனமழைப் பொழிவு இருக்கும் என அத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.