கூகுள் நிறுவனத்தில் மேலும் ஒரு தமிழர்…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பு, கலிபோர்னியா பல்கலை.,யில் ஆராய்ச்சி படிப்பு முடித்துள்ளார். மேலும், யாகூ லேப்ஸ், ஐபிஎம் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்