குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…


குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு, இன்று முதற்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில், இன்று நடக்க உள்ள தேர்தலில், 89 தொகுதிகளில், 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.