பாஜகவை தனிமனிதனாக எதிர்த்து தனிமனிதராக போராடியவர் ராகுல்: குஷ்பு..


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்துள்ளது.

குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி, தனி மனிதராக பாஜகவின் ஒட்டு மொத்த ராணுவத்தையும் எதிர்த்து நின்றார். இதன்மூலம் பாஜகவின் தூக்கத்தை காங்கிரஸ் கட்சி கெடுத்து இருக்கிறது. அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம்.”

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.