குஜ்ஜார் சமூக இட ஒதுக்கீடு மசோதா : ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் ..

குஜ்ஜார் உள்பட ஐந்து சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அரசு தங்களுக்கு ஐந்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில்,

இந்த மசோதா தாக்கல் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில எரிசக்தித் துறை அமைச்சரான பி.டி. கல்லா மசோதாவை தாக்கல் செய்தார். இதன் வாயிலாக,

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 21 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதமாக உயர்த்தப்படவுள்ளது.