குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தையொட்டி காலைமுதலே கோயில்களில் பக்தர்கள் குரு கடவுளான தட்ஷிணா மூர்த்தியை வழிபட்டு வந்தனர்

காரைக்கால் மாவட்டம் திருத்தருமபுரத்தில் தருமை ஆதினத்திற்குட்பட்ட அருள்தரு தேனாமிர்தவல்லி சமேத அருள்மிகு யாழ்முரிநாத சுவாமி திருக்கோயிலில் வீட்டிருக்கும் தட்ஷிணாமூர்த்திக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

இரவு 10.5-க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.