எச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு..


தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என டிவிட்டரில் ராஜா பதிவிட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் பெரியார் சிலையை பாஜக நகர செயலாளர்  சேதப்படுத்தினார். வன்முறையை துாண்டும் அளவிற்கு பதிவிட்ட ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து உயர்நீதிமன்றம் தற்போது விசாரணை நடத்த உள்ளது.