சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் எச். ராஜா

நீதிமன்றத்தை அவமதித்ததாக பதியப்பட்ட வழக்கில் பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் .

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் போலீசாருடன் நடந்த வாக்குவாதத்தில் ராஜா நீதிமன்றத்தை தரக்குறைவான பேசியதாக வீடியோ பரவியது.

இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது . இந்த வழக்கில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில ஆஜரானார்.

ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில். தான் உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி பேசி விட்டதாகவும், இதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கை முடித்து கொள்வதாக தெரிவித்தனர்.