சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியாயமானவர் : வைகோ..

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தி.மு-க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது சரியான நடவடிக்கை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாநில கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கூட பெற முடியாத சூழலில்

காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறினார்.

இதனை மனதில் கொண்டே ராகுலை, மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம் என்றும்

அதில் தவறு ஏதும் இல்லை என்றும் வைகோ தெரிவித்தார்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கூறப்படும் புகார்கள் நியாயமானவை இல்லை என்று வைகோ கூறினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள நியாயமான அதிகாரிகளில் ராதாகிருஷ்ணன் முக்கியமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.