கனமழை எதிரொலி : குற்றாலத்தில் காற்றாற்று வெள்ளம்..


கடந்த நில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க ஐந்தாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.