கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.