உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாசல்முன் பழுதடைந்த பேருந்து ..


போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8-நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் முறையாக பயிற்சி பெறாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் அங்காங்கே தற்காலிக ஓட்டுனர்களால் விபத்து ஏற்படுகிறது.

தற்போது ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாசல் முன்பு பேருந்து திடீரென பழுதாகி நின்றது. பயணிகள் அங்கே இறக்கி விடப்பட்டனர்.

அவர்கள் செய்வதறியாது தவித்தனர். அருகே பணிமனை இருந்தும் போராட்டத்தால் பொதுமக்களே பாதிப்படைந்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சத்துடனே பேருந்துகளில் வழியில்லாமல் பயணித்து வருகின்றனர்.

ராஜேந்திர சோழர்