மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கரோனா தொற்று உறுதி..

சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடித்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கரோனா உறுதியானது.

நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட நீங்கள் அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பொய்யான செய்திகள் வெளியானது.

அப்போது இந்த வதந்திகளை அமித் ஷா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.