பசியால் உடல் மெலிந்து, உலகை அதிர வைத்த 7 வயது சிறுமி அமல் ஹுசைன் உயிரிழப்பு..

ஏமன் நாட்டில் பசியால் உடல் மெலிந்து, உலகை அதிர வைத்த 7 வயது சிறுமி அமல் ஹுசைன் உயிரிழந்தாள்.

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான அரசப் படைக்கும், ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் வலுப்பெற்றுள்ளது.

ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்ளிட்டோர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு போதிய உணவும், மருத்துவ வசதியும் கிடைக்காத அவலம் குறித்து கடந்த வாரம் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரை வெளியிட்டது.

அதில், அஸ்லாம் நகரில் உள்ள முகாமில், பட்டினியால் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்த 7 வயது சிறுமி அமல் ஹுசைனின் படத்தை பிரசுரித்தது.

பால், ரொட்டி, பழம் என எதையுமே ஏற்றுக்கொள்ளாத அவளது உடல்நிலை, அனைவரையும் அதிர வைத்தது.

இந்நிலையில், அமல் ஹுசைன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் உயிரிழந்தாள். எப்போதும் புன்னகையுடன் இருந்த அமல் இறந்துவிட்டதாக அவளது தாய் கண்ணீருடன் கூறியுள்ளார்.