ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

திருவாரூரில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழக நலனுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.