இளையராஜாவுக்குப் பாராட்டு விழா: விஷால்

இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும்

தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும்

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டியளித்துள்ளார். அவருக்கு விழா எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா 75-வது வயது நிறைவு பெற்றதையொட்டி தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவரின் இசை சேவையை பாராட்டி மாபெரும் விழா பிப்ரவரி 23 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த கடந்த மூன்றாம் தேதி செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மகேந்திரா வேர்ல்டு சிட்டி சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா மூலம் தெரிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்டது.

இதன் நிறைவு விழா இன்று மாலை மகேந்திரா சிட்டி மைதானத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால், திரைப்பட நடிகர் நாசர், பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் வரும் பிப்ரவரி இரண்டாம் மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெற உள்ள மாபெரும் விழாவில் பல்வேறு பின்னணி பாடகர்கள் மற்றும் தென்னிந்திய பாடகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளதாகவும்

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதன் தலைவர் விஷால் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடக்க விழாவும் டிக்கெட் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முதல் டிக்கெட்டை திரைப்பட நடிகர் நாசர் அவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில் ’மாபெரும் இசைக் கலைஞரை கௌரவிப்பது நமது கடமை.

இதை அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒருங்கிணைத்து அவர் வைக்க வரவைப்பது நமது இசைக்கு மகுடம் செலுத்துவது போன்றதாகும்.

மேலும் இசைஞானி இளையராஜாதனக்கு இசை மூலம் வரும் ராயல்டி தொகையை ஒரு ஒரு சிறு பங்கு தயாரிப்பாளர் சங்க சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

மேலும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திட உள்ளதாகவும் இதன்மூலம் ஒரு பிரச்னையை முடிவுக்கு வர உள்ளதாகவும்

இதனால் நலிந்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த தொகை செலவிடப்படும் என்பதும் தெரியப்படுத்தினர்.