இந்தியா-பாக், அமைதி பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான் அழைப்பு..

இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் இம்மாதம் நடக்கும் ஐ.நா., கூட்டத்தில் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானின் மஹ்மூத் குரேஷியும் பங்கேற்கின்றனர்.

இதில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை துவங்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஐ.நா., கூட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆனால் இந்தியா சார்பில் இதற்கு எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

கடந்த 2015ல் பதான்கோட் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்ததால், இந்தியா, பாகிஸ்தானின் அனைத்து உறவுகளும் முழுவதும் துண்டிக்கப்பட்டது.