நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது : கமல்ஹாசன் பேட்டி…

நாட்டில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சீதக்காதி படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், படத்தை பார்த்து விட்டு தான் கருத்து கூற முடியும் என்றார்.

பொன்.மாணிக்கவேல் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நேர்மையான அதிகாரிகள்மீது அரசியல் அழுத்தம் இருக்கும், அதனை புறந்தள்ளிவிட்டு அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்றார்.