இந்தியாவில் 50% நிலத்தடி நீரில் விஷம்: மத்திய அரசு தகவல்..


இந்தியாவில் 50% மாவட்டங்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இது தொடர்பான அறிக்கையில், நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு கவலை தரும் அளவிற்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாக புளூரைடு, நைட்ரேட்கள் போன்ற ரசாயனங்கள் கலந்துள்ளன. 386 மாவட்டங்களில் நைட்ரேட், 335 மாவட்டங்களில் புளூரைடு, 301 மாவட்டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் ரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம் ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகவே உள்ளன.

சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கு மேற்பட்ட ரசாயனங்களின் அளவு அதிகாமக உள்ளது என்று அரசின் அறிக்கை கூறுகிறது.