இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நேற்று (ஜூன் 25) ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை :

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.