இந்தியாவில் புதியதாக மேலும் 1,408 பேருக்கு கரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது

31,06,348ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 836 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 57,542 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23,38,035 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 75.27 சதவீதமாக உள்ளது.

நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவிலான (6,82,383), பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் (3,79,385), ஆந்திர பிரதேசம் (3,53,111), கர்நாடகா (2,77,814), உத்தர பிரதேசம் (1,87,781) மற்றும் டெல்லி (1,61,466) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.