இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 பேர் ஆக அதிகரித்துள்ளது.அதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 462 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 273 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – உயிரிழப்பு

மஹாராஷ்டிரா – 77,793 2,710
தமிழகம் – 27,256 -220
டில்லி – 25,004-650
குஜராத் – 18,584 -1,155
ராஜஸ்தான் – 9,862 – 213
உத்தர பிரதேசம் – 9,237 – 245
மத்திய பிரதேசம் – 8,762 – 377
மேற்கு வங்கம் – 6,876-355
பீஹார் – 4.493 -29
கர்நாடகா- 4,320 – 57
ஆந்திரா – 4,223 – 71
ஹரியானா – 3,281 – 24
தெலுங்கானா – 3,147 – 105
காஷ்மீர் – 3,142 -105
ஒடிசா- 2.478-07
பஞ்சாப்- 2,415-47
அசாம் – 1,988-04
கேரளா – 1,588 – 14
உத்தரகாண்ட் – 1,153-10
ஜார்க்கண்ட்-783 -06
சத்தீஸ்கர்-756 -02
திரிபுரா-644-0
ஹிமாச்சல பிரதேசம் -383 – 05
சண்டிகர் -301-05
கோவா-106-0
மணிப்பூர்-124-0
\லடாக்-90-01
புதுச்சேரி- 82 – 0
நாகலாந்து-80-0
அருணாச்சல பிரதேசம்-42-0
அந்தமான-33-0
மேகாலயா-33-1
மிசோரம்-17-0
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-12-0
சிக்கிம்-02-0