இந்தியாவில் ஒரே நாளில் 64,500 பேருக்கு கரோனா தொற்று …

இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 64,500 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,092 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 15 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது

27,67,273 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 52,889ஆக அதிகரித்துள்ளது. எனினும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 20,37,870 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் குணமடைபவர்களின் விகிதமானது 73.64 சதவீதமாக உள்ளது.