இந்திய விமானி காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது : ராகுல் ட்வீட்..

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இந்திய விமானி அபினந்தன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,

இந்திய விமானி ஒருவர் காணாமல் போனது மிக வருத்தமளிக்கிறது, அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என நம்புகிறேன் என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடினமான காலங்களில் நாம் நமது ஆயுதப்படைகளுடன் துணை இருப்போம் என தெரிவித்துள்ளார்.