ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்..


ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிறையில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ 10 லட்சம் பிணைத் தொகை, பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றக் காவல் நிறைவடையும் நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.