ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்களை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனு விசாரணையின் போது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இந்த வழக்கு விசாரணையை  உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் ஒத்திவைத்தது.

இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 8 நாள் காவலை நீட்டிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. சிபிஐ காவல் முடிந்து இன்று பகல் 12 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.