ஐ.ஓ.பி வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..


சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு வங்கி லாக்கரை உடைத்து 106 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இதனையடுத்த தனிப்படை அமைக்கப் பட்டு பீகார் மாநிலம் மற்றும் நேபாளத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த இவனை சர்வதேச போலீசார் (இண்டர்போல்) உதவியுடன் பிடிக்கப்பட்டான். முன்னதாக, இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளி சபிலால் கைது செய்யப்பட்டுள்ளான்.