ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஜெய்ப்பூரில் இன்று, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.

20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.

சர்ஃப்ராஸ் கான் 46 ரன்கள், மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில், ஸ்டோக்ஸ் 2 விக்கெட், குல்கர்னி கௌதம் தலா 1 விக்கெட் விழ்த்தினர்.

இதனையடுத்து, 185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது,

இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிப்பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் ரஹானே 27 ரன்கள், ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள், சாம்சன் 30 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணியில் சாம் கர்ரன், முஜிப், ராஜ்புட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்