ஐபிஎல் கிரிக்கெட் : பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும்  ஆர்.அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 55-வது லீக் போட்டி நடைப்பெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  முதலில் களமிறங்கிய சென்னை அணியின் ஷேன் வாட்சன் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டு பிளிஸ்சிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.