பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா

 


சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பகின்றனர் என்று  ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்க  மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு என்று  ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். சென்னையில் நடைபெற இருந்த 6 ஐ.பி.எல். போட்டிகளையும் புனேவுக்கு மாற்ற  அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளுக்கு, பாதுகாப்பு வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததால் வேறு இடத்திற்கு மாற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.