ஐபிஎல் அரையிறுதி : டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு..

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது.