ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

18-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமறிங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 எடுத்து தோல்வியடைந்தது