இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கடல்பகுதி கண்காணிப்பு!

இஸ்ரோ செயற்கைக் கோள் படங்கள் மூலம் இந்திய கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளின் நடமாட்டம் கண்டறியப்பட உள்ளது. 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு, குஜராத்தில் தொடங்கி தமிழ்நாடு, மேற்கு வங்கம் வரை உள்ள ஏழாயிரத்து 516 கிலோ மீட்டர் கடல் எல்லை நவீன முறையில் கண்காணிப்பிற்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்திய கடற்பகுதியில் இஸ்ரோ செயற்கைக்கோள் எடுக்கும் படங்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான படகுகளின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 18 லட்சத்து 60 ஆயிரம் மீனவர்களுக்கு பயோமெட்ரிட் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. படகுகளில் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

 

ISRO satellite imageries to monitor suspicious vessels